நவராத்திரி பண்டிகைக்கு கோவையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடிப்பு

கோவையில் நவராத்திரி பண்டிகைக்கு முன்னதாக கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. புதிய வகை பொம்மைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.



Coimbatore: நவராத்திரி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கோவையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அக்டோபர் 3 முதல் 10 நாட்கள் நடைபெறும் இப்பண்டிகையில் கொலு பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கோயில்களிலும் வீடுகளிலும் காட்சிப்படுத்தப்படும் இந்த கொலு பொம்மைகள் பொதுவாக ஏதேனும் ஒரு கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. அஷ்டலட்சுமி, தசாவதாரம் போன்றவை மிகவும் பிரபலமான கொலு பொம்மைகளாக உள்ளன.



இந்த ஆண்டு புதிய வரவாக அயோத்தி ராமர், பூரி ஜெகன்நாதர், பஞ்சுமிட்டாய், தாயக்கட்டை போன்ற கொலு பொம்மைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து ஆர்வத்துடன் கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.

முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு கொலு பொம்மைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பொம்மைகளை வாங்குவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...