தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 333 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
வரும் ஜூலை 2ம் தேதியன்று நடைபெறும் இந்த எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக மே 2ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 5 மணி வரையிலும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வகுப்பில் சேர உதவி வேளாண் அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் போட்டோ ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தி தேர்வில் வெற்றிபெறுமாறு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 2ம் தேதியன்று நடைபெறும் இந்த எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக மே 2ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 5 மணி வரையிலும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வகுப்பில் சேர உதவி வேளாண் அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் போட்டோ ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தி தேர்வில் வெற்றிபெறுமாறு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.