கோவை 1வது வார்டில் 'உங்களை தேடி - உங்கள் ஊரில்' சிறப்பு திட்ட முகாம்

கோவை 1வது வார்டில் "உங்களை தேடி - உங்கள் ஊரில்" சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளித்தனர். அதிகாரிகள் விரைவில் தீர்வு காண உறுதியளித்தனர்.



கோவை: கோவையில் முதலமைச்சரின் "உங்களை தேடி - உங்கள் ஊரில்" சிறப்பு திட்ட முகாம் 1வது வார்டில் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் சு.அம்பிகா மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளித்தனர். மகளிர் உரிமைத்தொகை, பட்டா, சாலை போக்குவரத்து, குடிநீர் மற்றும் பொது பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.



மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அவற்றை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த முகாம் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...