இந்திய இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் இராணுவத்தைக் கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பசுமை தேசம் சார்பில் பாகிஸ்தான் இராணுவ காட்டுமிராண்டித்தன செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய வீரர் பஞ்சாபை சேர்ந்த பரம்ஜித் சிங் மற்றும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் ஆகியோருக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாக இரு மரக்கன்று அறிஞர் அண்ணா காலனி மணி லே அவுட்டில் உள்ள ரிசர்வ் சைட் ஓரத்தில் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் போது, கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மறைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய வீரர் பஞ்சாபை சேர்ந்த பரம்ஜித் சிங் மற்றும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் ஆகியோருக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாக இரு மரக்கன்று அறிஞர் அண்ணா காலனி மணி லே அவுட்டில் உள்ள ரிசர்வ் சைட் ஓரத்தில் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் போது, கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மறைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.