திமுக தொண்டர்கள் உழைக்க, கலைஞர் குடும்பம் பிழைக்கும் - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

கோவையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார். திமுக தொண்டர்கள் உழைக்க, கலைஞர் குடும்பம் பிழைக்கும் என்று குற்றம்சாட்டினார்.


Coimbatore: கோவையில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். அவர் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார்.

"திமுக நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-ம் ஆண்டு விழாவின் போது அவரது மகன் தலைமை என திமுக தொண்டர்கள் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். கலைஞர் குடும்பம் பிழைத்து கொண்டே இருக்கும்," என்று தமிழிசை குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், "பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. உதயநிதி முடிசூடுவதற்கான ஆரம்ப விழா. திமுக-வின் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-வது ஆண்டு விழாவின் போது உதயநிதியின் மகன் தலைமை என திமுகவில் தொண்டர்கள் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். அதை கொண்டு கலைஞர் குடும்பம் பிழைத்துக்கொண்டே இருக்கும்," என்றார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் தமிழிசை விமர்சனம் செய்தார். "வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருவதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது. கமிஷன், ஊழல் என கம்யூனிஸ்ட்கள் உள்ள வரை தமிழகத்தில் தொழிற்சாலைகளை சிறப்பான முறையில் நடத்த முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், குழந்தைகளுக்கு அரசு வழங்கும் முட்டைகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், கல்வித்துறையில் முறைகேடுகள் நடப்பதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார். இவை குறித்து கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை வரவேற்றதாகவும், இதனால் மக்களின் நேரமும் வரிப்பணமும் சேமிக்கப்படும் என்றும் தமிழிசை கூறினார். பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் சேவை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...