உடுமலையில் வழக்கறிஞர் மீது பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார்

உடுமலையில் பெரியார் பிறந்தநாள் பிளக்ஸ் பேனரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை களங்கப்படுத்தியதாக கூறி, வழக்கறிஞர் சாதிக்பாட்சா மீது பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சில தினங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முற்போக்கு வழக்கறிஞர் அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயரை களங்கப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மங்களம் ரவியின் அறிவுறுத்தலின் பேரில், வழக்கறிஞர் சாதிக்பாட்சா மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.



பாஜக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "வழக்கறிஞர் சாதிக்பாட்சா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பாஜகவினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.

இந்த புகார் அளிக்கும் நிகழ்வில் பாஜகவின் மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்ட செயலாளர் திருமதி கலா, மகளிரணி மாவட்ட பொதுச் செயலாளர் ராதிகா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மண்டல தலைவர்களான மாரியப்பன், நாகமாணிக்கம், சுப்ரமணியம், யுவன் மணி, கண்ணாயிரம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் இந்த புகார் அளிக்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.



இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...