கோவை N.G.G.O காலனியில் ரயில்வே மேம்பாலம்: மாற்றுப்பாதை குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவை N.G.G.O காலனியில் 1 கிலோமீட்டர் நீள ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சி, N.G.G.O காலனி ரயில்வே கேட் பகுதியில் 1 கிலோமீட்டர் நீள ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் பணி தொடங்குவதை முன்னிட்டு, அப்பகுதியில் ரயில்வே துறை, போக்குவரத்துத்துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



N.G.G.O காலனியில் மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து இடிகரை வழியாக கோவில்பாளையம் சென்று சக்தி சாலையை அடையும் பாதையில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும் போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



இந்த நிலையில், ரூ.32 கோடி மதிப்பீட்டில் 1 கிலோமீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. அக்டோபர் 1 முதல் பாலப் பணிகள் தொடங்கவுள்ளதால், அன்று முதல் ரயில்வே கேட் மூடப்படும்.



இதனை முன்னிட்டு, அதிகாரிகள் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அசோகபுரம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெற்றது. இந்த ஆய்வில் மாவட்ட கவுன்சிலர் S.கார்த்திக், ஊராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர்கள் மாணிக்கம், கலாசாந்தாராம், வார்டு உறுப்பினர்கள் சுதாகர், ஶ்ரீராம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தரப்பில், மாற்றுப்பாதை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அதிகாரிகள், தற்போது வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட் வழியாக செல்லும் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்றுப்பாதை குறித்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் விரைவில் வெளியிடும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...