உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கோவையில் பேரூர் ஆதினத்தை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பதாகவும் கூறினார்.



Coimbatore: கோவை பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை வழங்கி ஆசி பெற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பேரூர் ஆதினம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும், செம்மொழி நடத்துவதற்கு உறுதுணையாகவும் இருந்ததாகத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்ததாக கூறிய அமைச்சர், "ஒட்டுமொத்த தமிழ் உணர்வோடு இருக்கக்கூடிய அனைவரையும் ஒருங்கிணைப்பது தான் தமிழர் கலாச்சாரம். தமிழோடு இருக்கக்கூடிய பேரூர் ஆதினம் இருக்க வேண்டும்" என்றார்.



மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆரம்பம் முதலே எதிர்த்து வருவதாகவும், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் ஜமாத்தின் ஒருமித்த கருத்தும் இந்த மசோதாவிற்கு எதிராக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். "மத நல்லிணக்கத்திற்கு வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேலையில் மத்திய அரசு இந்த சட்டம் மூலம் ஒற்றுமையில் வேற்றுமையை காண வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது," என்றார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "கலைஞர் உரிய நேரத்தில் உள்ளாட்சித்துறையையும், துணை முதல்வர் பதவியையும் ஸ்டாலினுக்கு வழங்கினார். உழைப்பு என்றால் அது ஸ்டாலின் தான் என்று கலைஞர் சொன்னார். அதேபோல் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் செல்லப்பிள்ளை, கலைஞரின் பேரப்பிள்ளை, மாமன்னன் உதயநிதி ஸ்டாலினும் இன்று தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஒன்று சேர்த்து கழகத்தை வலுப்படுத்துகிறார். அந்த உழைப்புக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் கலைஞரைப் போல ஸ்டாலினும் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுப்பார்," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...