கோவையில் சர்வதேச டாய்-சி மாநாடு துவக்கம்: மனம், உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த பயிற்சி

கோவையில் நான்கு நாள் சர்வதேச டாய்-சி மாநாடு துவங்கியது. மனம், உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாட்டிற்கான டாய்-சி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவையில் சர்வதேச அளவிலான டாய்-சி மாநாடு செப்டம்பர் 19 அன்று துவங்கியது. நித்திய குருகுலா அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த மாநாடு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோயமுத்தூர் கிளப்பில் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

மாநாட்டின் துவக்க விழாவில், நித்திய குருகுலா மன நல ஆலோசணை மையம் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சசி சந்திரன் அனைவரையும் வரவேற்றார். கவுரவ அழைப்பாளர்களான திருமதி லட்சுமி நாராயணன் மற்றும் பை மெட்டல் பேரிங்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிவசைலம் நாராயணன் ஆகியோர் மாநாட்டை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மாநாட்டில் முக்கிய விருந்தினராக ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள டாய் சி ஆரோக்கிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பால் லாம் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், டாய்-சி கலையின் பயன்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். உடல் ஆரோக்கியம் மேம்பட, உடல் நலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட டாய்-சி எவ்வாறு உதவுகிறது என்பதை அவர் விளக்கினார்.

டாக்டர் பால் லாம், மனித வாழ்க்கையில் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதனை அதிகரிக்க டாய்-சி கலை பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் நித்திய குருகுலா நிர்வாகிகளான பிரசாந்த் சந்திரன், நடாஷா சந்திரன், சுதா சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு டாய்-சி கலையின் பயன்பாடுகள், முறையான பயிற்சிகள், மற்றும் இக்கலை குறித்த முழுமையான தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...