கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு-கேரள எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம்

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு-கேரள எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இரு மாநில காவல் அதிகாரிகள் எல்லை தாண்டிய குற்றங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.


Coimbatore: கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில காவல்துறையினரின் எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தகேயன் மற்றும் கேரளா காவல் கண்காணிப்பாளர் ஆனந்த்ப் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ், கேரளா பாலக்காடு உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வதி ஜுஜி, பாலக்காடு கலால் துறை ஆணையர் ராகேஷ், பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், அகலி துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் உள்ளிட்ட பல்வேறு காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள், உளவுத்துறை தகவல்கள் பரிமாற்றம், லாட்டரி, பாலியல் தொழில், போலி மது, கஞ்சா, கனிமங்கள், மணல், மதிப்புமிக்க பொருட்கள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், எல்லை சோதனைச் சாவடிகளின் செயல்பாடுகள், இரு மாநிலங்களின் தனிப்படைகளை ஒருங்கிணைப்பது, NBW கைதிகளை கைது செய்தல், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஆகிய விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டன.



சட்டவிரோத போக்குவரத்து, மருத்துவக் கழிவுகள் மற்றும் கால்நடைக் கழிவுகளை கொட்டுவதைத் தடுத்தல், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு போன்ற பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன. இரு மாநில காவல் அதிகாரிகளும் எல்லை தாண்டி செயல்படும்போது எதிர்கொள்ளும் இடையூறுகளை எடுத்துரைத்தனர். இதையடுத்து, இரு மாநில காவல் கண்காணிப்பாளர்களும் பணியில் உள்ள இடையூறுகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...