கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே காரணமெனவும், முதலமைச்சர் வாழ்ந்த இடத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் செஞ்சேரி மலை அருகேயுள்ள பச்சாகவுண்டம்பாளையம் பகுதியில் ஆறுமுக கவுண்டர் என்ற தென்னை விவசாயி இரண்டு போர்வெல் போட்டும் தண்ணீர் வராததால், கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இவரது குடும்பத்திற்கு அதிமுக அம்மா அணியை சேர்ந்த சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் கனகராஜ் தனது ஒரு மாத எம்எல்ஏ ஊதியமான 55 ஆயிரம் ரூபாயை இன்று இழப்பீடாக வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ கனகராஜ் கூறுகையில், இரண்டு போர்வெல்கள் போட்டும் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட ஆறுமுக கவுண்டர் குடும்பத்திற்கு தன்னால் முடிந்த சிறுதொகையினை முதலுதவியாக வழங்கி உள்ளேன். மேலும், அவரது குடும்பத்திற்கு அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
தன்னை போல அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு எனது அரசான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே காரணம். முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த இடத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் கட்சிக்கும், தமிழக அரசிற்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மீதான வழக்கு உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே அணி மாறுவதாக அறிவித்தோம். தற்போது அணி மாறும் சூழல் இல்லை. இவ்வாறு எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் செஞ்சேரி மலை அருகேயுள்ள பச்சாகவுண்டம்பாளையம் பகுதியில் ஆறுமுக கவுண்டர் என்ற தென்னை விவசாயி இரண்டு போர்வெல் போட்டும் தண்ணீர் வராததால், கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இவரது குடும்பத்திற்கு அதிமுக அம்மா அணியை சேர்ந்த சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் கனகராஜ் தனது ஒரு மாத எம்எல்ஏ ஊதியமான 55 ஆயிரம் ரூபாயை இன்று இழப்பீடாக வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ கனகராஜ் கூறுகையில், இரண்டு போர்வெல்கள் போட்டும் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட ஆறுமுக கவுண்டர் குடும்பத்திற்கு தன்னால் முடிந்த சிறுதொகையினை முதலுதவியாக வழங்கி உள்ளேன். மேலும், அவரது குடும்பத்திற்கு அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
தன்னை போல அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு எனது அரசான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே காரணம். முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த இடத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் கட்சிக்கும், தமிழக அரசிற்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மீதான வழக்கு உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே அணி மாறுவதாக அறிவித்தோம். தற்போது அணி மாறும் சூழல் இல்லை. இவ்வாறு எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்தார்.