கொடநாடு கொலை, கொள்ளைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசே காரணம்- சூலூர் எம்எல்ஏ கனகராஜ் குற்றச்சாட்டு

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே காரணமெனவும், முதலமைச்சர் வாழ்ந்த இடத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் செஞ்சேரி மலை அருகேயுள்ள பச்சாகவுண்டம்பாளையம் பகுதியில் ஆறுமுக கவுண்டர் என்ற தென்னை விவசாயி இரண்டு போர்வெல் போட்டும் தண்ணீர் வராததால், கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இவரது குடும்பத்திற்கு அதிமுக அம்மா அணியை சேர்ந்த சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் கனகராஜ் தனது ஒரு மாத எம்எல்ஏ ஊதியமான 55 ஆயிரம் ரூபாயை இன்று இழப்பீடாக வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ கனகராஜ் கூறுகையில், இரண்டு போர்வெல்கள் போட்டும் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட ஆறுமுக கவுண்டர் குடும்பத்திற்கு தன்னால் முடிந்த சிறுதொகையினை முதலுதவியாக வழங்கி உள்ளேன். மேலும், அவரது குடும்பத்திற்கு அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க உள்ளேன். 

தன்னை போல அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். 

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு எனது அரசான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே காரணம். முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த இடத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் கட்சிக்கும், தமிழக அரசிற்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. 

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மீதான வழக்கு உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே அணி மாறுவதாக அறிவித்தோம். தற்போது அணி மாறும் சூழல் இல்லை. இவ்வாறு எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...