கோவையில் சீருடை தொகை வழங்காததால் அரசுப் பேருந்துகள் ஜப்தி

கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சீருடைக்கான தொகையை வழங்காததால், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.


Coimbatore: கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சீருடைக்கான தொகையை வழங்காததால், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு ஒப்பந்தத்தின்படி வருடத்திற்கு நான்கு ஜோடி சீருடைகளுக்கான நிதி வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த தொகை பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.



இது தொடர்பாக, கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் நடத்துநர் மோகன்ராஜ் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கான 46,583 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.

இதேபோல், நடத்துநர் கே.பி. சக்திவேல் என்பவரும் 2007 முதல் வழங்கப்படாத பணி வரன்முறை நிலுவைத் தொகை குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில், நீதிமன்றம் இரண்டு மாநகர பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள் தற்போது நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சீருடை பணியாளர்கள் சங்கம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு உடனடியாக சீருடைத் தொகை மற்றும் பணி வரன்முறை நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...