கரூரில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புடைய மணலை திருட்டுத்தனமாக கொண்டு வந்த லாரிகளை சூலூர் லாரி உரிமையாளர்கள் சிறைபிடித்தனர்.
தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் மணல் எடுக்க தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள குவாரிகளில் மணல் திருடப்பட்டு வந்தது.
இது குறித்து உரிய சோதனை மேற்கொள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் அரசு அறிவுறுத்தியிருந்தாலும், காவல்துறைக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு திருட்டு மணல் விற்பனை படுஜோராக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை கரூரில் இருந்து 12 சக்கரம் கொண்ட நான்கு லாரிகளில் 36 யூனிட் மற்றும் 10 சக்கரம் கொண்ட ஒரு வாகனத்தில் 3.5 யூனிட் மணலும் விற்பனைக்காக கொண்டு வரும்போது சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் வட்டாட்சியர் பழனி முன்னிலையில் சிறைபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மணல் லாரிக்கு முன்பாக வந்த காரில் இருந்தவர்கள் வட்டாட்சியரை லாரிகளை விடச்சொல்லி மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் மிணல் திருடி வந்தவர்களை எதிர்த்த நிலையில், காரில் வந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மணல் குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் மணல் எடுக்க தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள குவாரிகளில் மணல் திருடப்பட்டு வந்தது.
இது குறித்து உரிய சோதனை மேற்கொள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் அரசு அறிவுறுத்தியிருந்தாலும், காவல்துறைக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு திருட்டு மணல் விற்பனை படுஜோராக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை கரூரில் இருந்து 12 சக்கரம் கொண்ட நான்கு லாரிகளில் 36 யூனிட் மற்றும் 10 சக்கரம் கொண்ட ஒரு வாகனத்தில் 3.5 யூனிட் மணலும் விற்பனைக்காக கொண்டு வரும்போது சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் வட்டாட்சியர் பழனி முன்னிலையில் சிறைபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மணல் லாரிக்கு முன்பாக வந்த காரில் இருந்தவர்கள் வட்டாட்சியரை லாரிகளை விடச்சொல்லி மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் மிணல் திருடி வந்தவர்களை எதிர்த்த நிலையில், காரில் வந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மணல் குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.