மேட்டுப்பாளையம் நகராட்சியில் நாளை முதல் சீரான குடிநீர் விநியோகம் - நகராட்சி ஆணையர் அறிவிப்பு

மேட்டுப்பாளையத்தில் மூன்று நாள் குடிநீர் விநியோக தடைக்குப் பிறகு, நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் அமுதா அறிவித்துள்ளார். பராமரிப்பு பணிகள் இன்று நிறைவடையும்.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சியில் நாளை (செப்டம்பர் 21) முதல் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. பவானி ஆற்றிலிருந்து மூன்று குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 1 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, சாமண்ணா நீரேற்று நிலையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்படுகிறது.

சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மூன்று குடிநீர் திட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செப்டம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்களுக்கு மேட்டுப்பாளையம் நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது என நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் அமுதா நேற்று (செப்டம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில், "சுத்திகரிப்பு நிலையத்தில் சேரும் சகதி அதிகளவில் படிந்துள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதேபோன்று நகரில் குடிநீர் குழாய்களில் உள்ள உடைப்புகள் மற்றும் தண்ணீர் கசியும் இடங்களில் குழாய்கள் மாற்றும் பணிகளும், உடைப்புகள் சரி செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன," என்று தெரிவித்தார்.

மேலும், "அனைத்து பணிகளும் இன்று (செப்டம்பர் 20) முடிக்கப்படும். நாளை (செப்டம்பர் 21) முதல் பொதுமக்களுக்கு வழக்கம் போல் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...