பொள்ளாச்சி அருகே வாடகை பாத்திர கடையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியில் உள்ள வாடகை பாத்திர கடையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு பகுதியில் வாடகை பாத்திர கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் கருகி நாசமானது.

ஆழியாறு பகுதியைச் சேர்ந்த கஸ்தூரிராஜா என்பவர், வால்பாறை ரோடு பகுதியில் ஆழியாறு தபால் நிலையம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த ஒரு வருடமாக வாடகை பாத்திர கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நாகராஜ் என்பவர் இரவு தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நேற்று நள்ளிரவில் நாகராஜ் வழக்கம் போல கடைக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். சுமார் ஒரு மணி அளவில் கடைக்குள் உள்ளே பிளாஸ்டிக் சேர்கள் தீப்பிடித்து எரிவதை பார்த்த நாகராஜ் வெளியே வந்து அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.



உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



ஆனால், அதற்குள் கடையிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டன.

இந்த சம்பவம் குறித்து ஆழியாறு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஆழியாறு பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...