மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை கூட்டம்

மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 2023-2024 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள், ஊதியம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பெள்ளாதி ஊராட்சி மன்ற தலைவர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்த வேலை பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கிய ஊதியம் குறித்து சமூக தணிக்கை நடைபெற்றது. சமூக தணிக்கையாளர் மற்றும் வட்டார வள பயிற்றுநர் ரவிச்சந்திரன் பங்கேற்று பணிகள் குறித்து தணிக்கை செய்தார்.



இந்த தணிக்கையில், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டிற்கும் வருகை நாட்களின் கணினி பதிவேடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், விவசாய தோட்டத்தில் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கரை அமைப்பது குறித்த பணிகளையும் பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...