வெளிப்புற மின்சக்தி தயாரிப்புகளை இந்தியாவில் வெளியிடும் ஹஸ்வர்னா

ஹஸ்வர்னா உயர் தர மின்சக்தி தயாரிப்புகளை சங்கிலி ரம்பம், பிரஷ் கட்டர்ஸ், ட்ரிம்மர்ஸ், மிஸ்டெர்ஸ், தெளிப்பான்கள், ரைட்-ஆன் மோவர்ஸ் போன்ற குறிப்பிட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றது. இவற்றில் பல தயாரிப்புகள் பெட்ரோல் இன்ஜினில் அல்லது பேட்டரி சக்தியூட்டப்பட்ட மோட்டார்களில் கிடைக்கின்றன.

உலகளவில் காடு மற்றும் நிலத்தை பண்படுத்தும் கருவிகளுக்கான முன்னணி நிறுவனமான ஹஸ்வர்னா தங்களுடைய வெளிப்புற மின்சக்தி தயாரிப்புகளின் வரிசையையும் காடு, பூங்கா மற்றும் தோட்டப் பராமரிப்புக்கான புதுமையான தீர்வுகளையும் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகின்றது.



326 ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு தனித்துவத்தை பதித்த ஸ்வீடனைச் சார்ந்த பிராண்ட், இந்திய நிலைமைகளுக்கு சிறப்பாகப் பொருந்தக்கூடிய தரமான தயாரிப்புகளின் வலுவான ரகங்களை அளிக்கிறது. தங்கள் பல்வேறுபட்ட ரகத்திலான தயாரிப்புகளின் உற்பத்தி அதிகரிப்பிற்கு உதவுவதற்காக நவீன பொறியியலுக்கான ஹஸ்வர்னா எளிதான அணுகலை கொண்டு வர இருக்கிறது.

இதன் துவக்க நிகழ்ச்சியில் இதுகுறித்து ஹஸ்வர்னா மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் ராகவன் கூறுகையில், 

“இந்தியாவின் சந்தை ஆற்றலை நாங்கள் மதிப்பீடு செய்ததில் இந்தியா ஒரு விரைவாக வளரும் சந்தைகளில் ஒன்றாக எங்களுக்கு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் தயாரிப்புகள் இந்தியா போன்ற கடினமான சந்தை நிலைமைகளுக்கென வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவை கடினமான வேலைகளை திறமையாக கையாள பயனர்களுக்கு உதவுகின்றன.



நாங்கள் தேர்வுசெய்த தயாரிப்புகளோடு வந்து சரியான தயாரிப்பு சரியான நுகர்வோருக்கு சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதிசெய்வதற்காக டீலர்களின் நெட்வொர்க்கை வளர்த்துக்கொண்டு இருக்கிறோம். உலகளாவிய காடு மற்றும் நிலத்தை பண்படுத்தும் துறை சந்திக்கும் சவால்களில் இருந்து கற்றுக்கொண்டதால், எங்கள் திறன்வாய்ந்த மின்சக்தி சாதனங்களினால் இந்திய தொழில்முறையாளர்களுக்கும் கார்ப்பரேட் துறையினருக்கும் சிறப்பானதை அளிக்க முடியும்” என அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்த, ஹஸ்வர்னா பிரிவு உலகளாவிய தலைவர் பவேல் ஹஜ்மன் பேசுகையில், “நுகர்வோர் மீதான எங்களுடைய கவனமும் பல்வேறு சந்தைகளின் தேவைகளை சந்தித்ததினாலும் ஹஸ்வர்னா-வினுடைய வெற்றி உலக அளவில் சம்பாதிக்கப்பட்டது.



இந்தியாவில், எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கு அர்ப்பணித்துள்ளோம். இனிமேல் எங்கள் உக்தியானது எங்கள் சந்தை பங்கை அதிகரிப்பதற்கு நேராக பணிசெய்து எங்கள் உலகளாவிய தொகுப்பில் பல்வேறு புதிய பிரிவுகளை சேர்த்து எங்கள் பொருள் தொகுப்புகளை விரிவுபடுத்துவதில் இருக்கும்.

ஹஸ்வர்னாவின் உடைய நிபுணர்கள் குழு வலிமையானதோடு நன்கு நிரூபிக்கப்பட்ட இயந்திரங்களில் இருந்து ஆற்றலை கண்காணிப்பதில் ஒன்றிணைந்து பணியாற்றி பேட்டரி மற்றும் ரோபோட்டிங் இயந்திரங்கள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை வெளியிடும் தரத்திலானவை முதல் புத்தம் புதிய தயாரிப்புகள் வரையில் பயன்படுத்தி உள்ளனர்.

தொழில்முறையாக நிலத்தை பண்படுத்துகின்றவர்களுக்கு ஆதரவு அளிக்கும்படியாக ஹஸ்வர்னாவுடைய தொழில்நுட்ப தீர்வுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று நாங்களும் பார்த்து வருகிறோம்.” என்று கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...