உடுமலையில் பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் புகார்

உடுமலையில் பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் பேசியதாக குற்றம் சாட்டினர்.



திருப்பூர்: உடுமலையில் பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றிருந்தபோது, இந்திய தேர்தல் நடைமுறை குறித்து பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ராகுல் காந்தியை தவறாக சித்தரித்து பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த தர்விந்தர் சிங் மர்வா, சிவசேனா (ஷிண்டே பிரிவு) கட்சித் தலைவர் சஞ்சய் கெய்க்வாட், உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த எச்.ராஜா ஆகியோர் ராகுல் காந்தியை தவறாக சித்தரித்து பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கலவரத்தை தூண்டிவிடும் நோக்கத்திலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்திலும் அமைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடுமலை நகர காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், கிட்டுசாமி, உடுமலை நகர மன்ற 4-வது வார்டு உறுப்பினர் கலைவாணி, எஸ்.முருகன், வக்கீல் வெற்றிவேல் குமார், பொன் பலராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...