அன்னூர் அருகே வாக்கனாங்கொம்பு கிராமத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே வாக்கனாங்கொம்பு கிராமத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாழாதல் போன்ற காரணங்களை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கனாங்கொம்பு பகுதியில் அரசு அனுமதியுடன் கிராவல் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதி பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், கிராவல் மண் எடுப்பதால் தங்கள் கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், எதிர்வரும் தலைமுறையினருக்கு நிலத்தடி நீர் பாழாகும் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் அப்பகுதி மக்கள். மேலும், அதிக அளவில் லாரிகள் கிராம சாலைகள் வழியாக சென்று வருவதால் சாலை சேதம் அடைவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால், கிராவல் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கிராவல் மண் எடுத்து வந்த லாரிகளை சிறைப்பிடித்து வாக்கனாங்கொம்பு ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்த தகவல் அறிந்து வந்த அக்கரை செங்கப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உரிய அனுமதி உள்ளதா என ஒப்பந்ததாரரிடம் ஆவணங்களை சரிபார்த்தனர்.

கோவை கனிமவளத்துறை அதிகாரிகளின் அனுமதி கடிதம் பெற்று கிராவல் மண் அள்ளப்படும் நிலையில், பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் மண் எடுக்க அனுமதி கொடுக்க கூடாது என்றும், அதை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, கிராவல் மண் எடுக்கும் பணியை நிறுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

அதிகாரிகள் மண் எடுக்க வேண்டாம் என ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க அறிவுறுத்தினர். புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசிலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...