தாராபுரம் அருகே அண்ணாவின் 116வது பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுக்கூட்டம்

தாராபுரம் அருகே நல்லம்பாளையத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என உறுதியளிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள நல்லம்பாளையத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். அதிமுக தலைமை கழக பேச்சாளர் இராசகோபால் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு தலைமை வகித்த திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் எம்எல்ஏவுமான மகேந்திரன் உரையாற்றினார்.



தனது உரையில் மகேந்திரன், "2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்" என்று உறுதியாகக் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பாலகுமாரன், செந்தில்குமார், சோமசுந்தரம், ராஜரத்தினம், நகர செயலாளர் ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர்கள் பைப்ரவி, தமிழரசன், லட்சுமணசாமி, வெற்றிவேல், சுகன்குமார், கொளத்துப்பாளையம் அவைத்தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சின்னத்துரை, சிவசங்கரன், ராமதுரை மற்றும் பல சார்பு நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் இளைஞர் அணி தேர்பட்டி ஆதித்தன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...