கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கோவையில் கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் பரிசுகள் வழங்கினார்.


Coimbatore: கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பாக 2023-2024-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பிற துறைகளில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். மேலும் அதனை தொடர்ந்து இந்த விழாவில் வின்னர்'ஸ் இண்டியா நிறுவனர் C.K கண்ணன் நான்கு மாணவர்களுக்கு தலா இரண்டு சென்ட் நிலங்களை இலவசமாக வழங்கினார்.



நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல்துறை தலைவர் பாரி IPS, டாலர் குரூப் ராமமூர்த்தி, கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் தலைவர் ராஜ்குமார், துணை தலைவர் நந்தகுமார், இணைச் செயலாளர் லோகநாதன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் அழகேசன், இந்துஸ்தான் கல்விக் குழுமம் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...