பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

கோவை சவுரிபாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.


Coimbatore: பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கை மண்டலில் சவுரிபாளையம் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று (செப்டம்பர் 22) மேளதாளங்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிங்கை மண்டல உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் ரமேஷ்குமார், SRS.ராஜா ஆகியோர் தலைமையில் வழிபாடு நடைபெற்றது. மாவட்ட உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் RT.முரளி, மண்டல உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர்கள் பைலட் முருகேசன், பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் ஜே.ரமேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், மாவட்ட துணைத் தலைவர் M.R.சரவணன், ராஜசேகர், அசோக்குமார், ராஜேந்திர பிரசாத், காட்டன்சுரேஷ், சக்தி, கணேசன், பூபேஷ், சொர்ண அரவிந்த், கண்ணன், வில்லியம்ஸ், மகேந்திரன் மற்றும் பல தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நடைபெற்றதோடு, பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. கோவில் வளாகத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...