மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் காட்டு யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் மரப்பாலம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Coimbatore: மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் மரப்பாலம் பகுதியில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்வதற்காக கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு வனச்சாலைகள் உள்ளன. இந்த வனச்சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வரக்கூடிய நிலையில், தற்போது லேசான வறட்சி வனப் பகுதியில் ஏற்பட்டிருக்க கூடிய நிலையில் வன உயிரினங்கள் வனத்தின் சாலை ஓரங்களில் இருக்கக்கூடிய பொருட்களை மேய வெளியே நடமாடி வருகிறது.



மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மரப்பாலம் என்ற இடத்தில் ஒற்றை காட்டு யானை சாலை ஓரத்தில் இருந்த பொருட்களை மேய்ந்து கொண்டு நடமாடிக் கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை அந்தந்த பகுதிகளிலேயே நிறுத்திக் கொண்டனர்.

சாலையோரத்தில் நின்று கொண்டிருக்க கூடிய யானை திடீரென தங்களை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சுமார் அரை மணி நேரம் அங்கேயே உலாவிய அந்த காட்டு யானை பின்னர் அடர் பகுதிக்குள் சென்று மறைந்தது.

இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் சற்று நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். இனிவரும் காலங்களில் வன உயிரினங்களின் நடமாட்டம் சாலை ஓரங்களில் இருக்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் மிதவேகத்தில் சென்று எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...