மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் காட்டு யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் மரப்பாலம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Coimbatore: மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் மரப்பாலம் பகுதியில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்வதற்காக கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு வனச்சாலைகள் உள்ளன. இந்த வனச்சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வரக்கூடிய நிலையில், தற்போது லேசான வறட்சி வனப் பகுதியில் ஏற்பட்டிருக்க கூடிய நிலையில் வன உயிரினங்கள் வனத்தின் சாலை ஓரங்களில் இருக்கக்கூடிய பொருட்களை மேய வெளியே நடமாடி வருகிறது.



மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மரப்பாலம் என்ற இடத்தில் ஒற்றை காட்டு யானை சாலை ஓரத்தில் இருந்த பொருட்களை மேய்ந்து கொண்டு நடமாடிக் கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை அந்தந்த பகுதிகளிலேயே நிறுத்திக் கொண்டனர்.

சாலையோரத்தில் நின்று கொண்டிருக்க கூடிய யானை திடீரென தங்களை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சுமார் அரை மணி நேரம் அங்கேயே உலாவிய அந்த காட்டு யானை பின்னர் அடர் பகுதிக்குள் சென்று மறைந்தது.

இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் சற்று நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். இனிவரும் காலங்களில் வன உயிரினங்களின் நடமாட்டம் சாலை ஓரங்களில் இருக்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் மிதவேகத்தில் சென்று எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...