தாராபுரம் அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தாராபுரம் ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் ஓலக்கடை எதிரே உள்ள தனியார் கேஸ் பங்க் அருகே சிறுத்தை ஒன்று இருப்பதை தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 40) பார்த்தார். உடனடியாக அவர் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.



இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தலைமை காவலர்கள் கருப்புசாமி மற்றும் சேகர் ஆய்வு செய்தனர். பின்னர் காங்கேயம் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் வனச்சரக அலுவலர் மௌனிகா தலைமையில் வனக்காவலர் குணசேகரன், வனக்காப்பாளர் பூரணி ஆகியோர் தனியார் கேஸ் பங்கின் அருகில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்தனர். மேலும், சிவக்குமாரிடம் சிறுத்தையின் அடையாளங்களை கேட்டறிந்தனர். இப்பகுதியின் அருகே ரங்கம்பாளையம், கருவேலம்பள்ளம், ஆச்சியூர், மங்களம்பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி, துலுக்கனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.

வனக்காவலர்கள் சிறுத்தையின் கால் தடம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...