பொள்ளாச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த முள்ளம்பன்றி: 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டது

பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முள்ளம்பன்றி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு முள்ளம்பன்றியை பிடித்து ஆழியார் வனப்பகுதியில் விடுவித்தனர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முள்ளம்பன்றி ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் இன்று காலை நடந்தது.

அங்கலக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ தேவைக்காக வந்து செல்கின்றனர். இன்று காலை வழக்கம் போல ஊராட்சி தூய்மை பணியாளர்கள் சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள செடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென முள்ளம்பன்றி ஒன்று அப்பகுதியில் தென்பட்டது.



இதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முள்ளம்பன்றியை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், முள்ளம்பன்றி அங்கிருந்து தப்பி ஓடி ஊர் பகுதிக்குள் புகுந்தது.

தொடர்ந்து மூன்று மணி நேரம் நடந்த போராட்டத்திற்குப் பிறகு, வனத்துறையினர் முள்ளம்பன்றியை பிடித்தனர். பின்னர் அதனை ஆழியார் அடர்ந்த வனப் பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...