பொள்ளாச்சி அருகே ஜலத்தூரில் 108 ஆம்புலன்ஸில் பெண் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் துரித செயல்பாட்டால் தாயும் சேயும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜலத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்திரன் மனைவி காயத்திரிக்கு இன்று காலை வீட்டில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தங்கவேல் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்றனர். காயத்திரியை ஆம்புலன்ஸில் ஏற்றி பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், பிரசவ வலி அதிகரித்தது.
நிலைமையின் அவசரத்தை உணர்ந்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன், ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். அவரது சிகிச்சையின் பலனாக, சிறிது நேரத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமயோசிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனர் தங்கவேல் மற்றும் மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தங்கவேல் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்றனர். காயத்திரியை ஆம்புலன்ஸில் ஏற்றி பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், பிரசவ வலி அதிகரித்தது.
நிலைமையின் அவசரத்தை உணர்ந்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன், ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். அவரது சிகிச்சையின் பலனாக, சிறிது நேரத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமயோசிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனர் தங்கவேல் மற்றும் மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.