தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனம் இடையே உயிர் சக்தி உற்பத்திக்கான தீவனப் பயிர்களை அடையாளம் காண்பதற்காக 20.09.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனம் இடையே 20.09.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் உயிர் சக்தி உற்பத்திக்கான தீவனப் பயிர்களை அடையாளம் காண்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் இரா.தமிழ்வேந்தன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போதைய சூழலில் உயிர் சக்தி ஆற்றலுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அதிக தாவர உற்பத்தி திறன் மற்றும் புதுபிக்கத்தக்க வளங்கள் கொண்ட தீவனப் பயிர்கள் இந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் கீழ் இயங்கும் தீவனப் பயிர் துறையின் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட தீவனப் பயிர் இரகங்கள் அதிக தாவர உற்பத்தி திறன் கொண்டவை. குறிப்பாக, அதிக கரிமப்பொருள் மற்றும் அதிக தாவர உற்பத்தி திறன் கொண்ட கம்பு நேப்பியர் புல், உயிர் சக்தி உற்பத்திக்கு சிறந்த மூலப்பொருளாக கருதப்படுகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பாக பதிவாளர் முனைவர் இரா.தமிழ்வேந்தனும், ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனத்தின் சார்பாக முதன்மை செயல் அலுவலர் பசீர் அகமது சிராசியும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் முனைவர் ஆர்.இரவிகேசவன், தீவனப் பயிர் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர். புஷ்பம், தீவனப் பயிர் துறையின் விஞ்ஞானிகள், ஆர்.பி.இ.எல் ஹைதராபாத் முதன்மை மேலாளர், ஆர்.பி.இ.எல் மும்பை திரு ஜி.ஆனந்தன், பாலாஜி பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, உயிர் சக்தி ஆற்றல் உற்பத்திக்கு ஏற்ற தீவனப் பயிர்களை எவ்வாறு பயிர் செய்ய வேண்டும் என்ற தொழில்நுட்பத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனத்திற்கு வழங்கும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...