கோவையில் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய கட்டிடத்தின் பணிகளையும் பார்வையிட்டார்.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மாணவியர் விடுதியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த விடுதி ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி வருகின்றனர்.

10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளாகத்திலேயே புதியதாக அனைத்து வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கட்டிடம் கட்டப்பட்டு வரும் இடம் மற்றும் அதன் வரைபடம், பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர் விடுதிக்குள் சென்ற அமைச்சர், அங்குள்ள வேலையாட்கள் மற்றும் தங்கி கல்வி பயின்று வரும் மாணவிகளிடம் விடுதியில் அளிக்கப்படும் வசதிகள் மற்றும் உணவு போன்றவை குறித்து கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், "கோவையில் 10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை தற்பொழுது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். இப்போது கட்டப்பட்டு வரும் கட்டிடம் அனைத்து வசதிகளுடன் கூடியது. குறிப்பாக கட்டிடத்திற்குள்ளேயே மாணவிகள் தங்கும் அறைகள், குளியலறைகள், மேசைகள், நாற்காலிகள், கட்டில்கள் போன்றவை அனைத்தும் இடம்பெறும் வகையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் தமிழகத்தின் திருச்சி, மதுரை, சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் மாணவர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...