கோவையில் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய கட்டிடத்தின் பணிகளையும் பார்வையிட்டார்.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மாணவியர் விடுதியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த விடுதி ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி வருகின்றனர்.

10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளாகத்திலேயே புதியதாக அனைத்து வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கட்டிடம் கட்டப்பட்டு வரும் இடம் மற்றும் அதன் வரைபடம், பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர் விடுதிக்குள் சென்ற அமைச்சர், அங்குள்ள வேலையாட்கள் மற்றும் தங்கி கல்வி பயின்று வரும் மாணவிகளிடம் விடுதியில் அளிக்கப்படும் வசதிகள் மற்றும் உணவு போன்றவை குறித்து கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், "கோவையில் 10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை தற்பொழுது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். இப்போது கட்டப்பட்டு வரும் கட்டிடம் அனைத்து வசதிகளுடன் கூடியது. குறிப்பாக கட்டிடத்திற்குள்ளேயே மாணவிகள் தங்கும் அறைகள், குளியலறைகள், மேசைகள், நாற்காலிகள், கட்டில்கள் போன்றவை அனைத்தும் இடம்பெறும் வகையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் தமிழகத்தின் திருச்சி, மதுரை, சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் மாணவர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...