கேரளாவில் நடைபெற்ற கேலோ இந்தியா சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி சாதனை

கேரளாவில் நடைபெற்ற கேலோ இந்தியா பெண்கள் சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி ஹஷினி நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.


கோவை: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கர்யாவட்டத்தில் கடந்த 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கேரளா சைக்கிளிங் அசோசியேஷன் சார்பாக "கேலோ இந்தியா" பெண்களுக்கான சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள் சப் ஜூனியர், பெண்கள் ஜூனியர், பெண்கள் எலைட் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகம் சார்பாக கோவையைச் சேர்ந்த மாணவி ஹஷினி கலந்து கொண்டார். அவர் கெரின், ஸ்பிரின்ட் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு தங்கப் பதக்கமும், டைம் டாயல் மற்றும் பர்சியூட் பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப் பதக்கமும் என மொத்தம் நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.



இந்த வெற்றியுடன் கோவை திரும்பிய ஹஷினியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இளம் வயதிலேயே சர்வதேச அளவிலான போட்டியில் சாதனை படைத்துள்ள ஹஷினியின் வெற்றி, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த சாதனை மூலம் கோவை மாவட்டத்தின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியையும் இது எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...