கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை காரமடை பகுதியில் 6 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த பழனி மணி மீது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மதுரையைச் சேர்ந்த பழனி மணி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு பரிந்துரைத்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில் பழனி மணி மீது இன்று (செப்டம்பர் 23) குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழனி மணி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...