தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமக உள்ளதால் மக்கள் மலை பிரதேசங்களை நாடி வர ஆரமித்து விட்டனர்.

சுற்றுலா பயணிகளின் சொர்க்கமான நீலகிரியை நோக்கி படையெடுத்து விட்டனர் என கூறும் அளவிற்கு கூட்டம் கூட்டமாய் குவிந்து வருகின்றனர்.
தாவிரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைகாரா நீர்விழ்ச்சி, பைகாரா படகு இல்லம், கூடலூர் தவளைமலை காட்சி, முதுமலை, மசினகுடி, கோத்தகிரி, குன்னூர் சிம்ஸ்பார்க், டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் என அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் தலைகளாகவே காணப்படுகிறது.
உதகை தாவிரவியல் பூங்காவின் நுழைவு வாயில் அமைந்துள்ள பசுமை போர்த்திய அகன்ற புல்வெளி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் விளையாடி விடுமுறையை குதுகலமாக கொண்டாடி சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.