காரமடையில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தமிழர் தேசம் கட்சி தலைவர் கே கே எஸ் செல்வகுமார் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதைக் கண்டித்து காரமடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியினர் போலீஸ் நடவடிக்கையை திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என குற்றம்சாட்டினர்.


கோவை: காரமடை கார் ஸ்டேன்டு பகுதியில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் தமிழர் தேசம் கட்சியின் மாநில தலைவர் கே கே எஸ் செல்வகுமார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க கோவை மாவட்ட அமைப்பாளர் கண்டியூர் முருகேசன் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் கோவை முருகேசன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கே கே எஸ் செல்வகுமார் குற்ற பின்னணி கொண்டவராக காவல்துறையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தங்கள் சமுதாய தலைவர் மீதும் சமூகப் போராளி மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் துறையினர் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும், கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தேசம் கட்சி பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி வைத்த நிலையில், அந்தக் கட்சியின் தலைவரை குறிவைத்து தற்போது வீட்டில் சோதனை நடத்துவதும், குற்ற வழக்குகளில் அவரது பெயரை சேர்ப்பதும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...