பழனி பஞ்சாமிர்தம் குறித்த வதந்தி: பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது வழக்கு

பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பியதாக பாஜக தொழிற் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவாகியுள்ளது.


பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த பாஜக தொழிற் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மீது கோயில் தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனி கோயிலுக்கு திண்டுக்கல் தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்குவதாக வலைத்தளங்களில் செல்வகுமார் தவறான தகவல் பரப்பி வந்தார். வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகிகள் செல்வகுமார், வினோஜ் பி செல்வம் ஆகியோர் மீது கோயில் நிர்வாகம் புகார் அளித்தது.

கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே, 2023 ஏப்ரல் 13 அன்று சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வன்முறையைத் தூண்டியதாக செல்வகுமார் கைது செய்யப்பட்டார்.

கோவை நகரில் சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகளை இடுபவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரத்துறை அமைச்சர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு இரு குழுக்களுக்கிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் டுவிட்டரில் பதிவுகளை இட்டு வந்தார் செல்வகுமார்.

திமுக ஐடி பிரிவு உறுப்பினர் சுரேஷ் குமார் கோவை நகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாஜக தொழிற்சங்க பிரிவின் மாநில துணைத் தலைவர் செல்வகுமாரை புதன்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில், 2022ஆம் ஆண்டு அவர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்தது தெரியவந்தது. அந்த வழக்கில் அவர் முன்ஜாமீனில் வெளியே வந்திருந்தார். செல்வகுமாரின் டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட பதிவுகளும், மறுபதிவுகளும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் அவர் மீதான மோசடி வழக்கு தொடர்பாகவும் செல்வகுமார் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...