தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் முற்றுகைப் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட உபரி நிலங்களுக்கு எஃப் பட்டா கோரி ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் நிறுவனத் தலைவர் பவுத்தன் தலைமை வகித்தார்.

போராட்டக்காரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த மனுவில், காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தின் காடையூர் மற்றும் வட சிண்ணாரி பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வீனம்பாளையம், கல்லாங்காட்டுப்புதூர், பெனங்காளி வலசு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின அருந்ததிய மக்களுக்கு 1994 ஆம் ஆண்டு உபரி நிலம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



ஈரோடு நில சீர்திருத்த உதவி ஆணையரின் உத்தரவின்படி, காடையூர் கிராமத்தில் 30 பயனாளிகளுக்கும், வட சின்னாரி பாளையம் கிராமத்தில் 21 பயனாளிகளுக்கும் மொத்தம் 51 பயனாளிகளுக்கு உபரி நிலம் வழங்கப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகள் கடந்தும் இந்த நிலங்களை விவசாயம் செய்வதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த நிலங்களை அளவீடு செய்து, விவசாயம் செய்வதற்கான எஃப் பட்டா நகல் உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் மாவட்ட நிர்வாகி சி.கார்த்திக், அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் வி.கே.தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...