கோவையில் கால்நடை கணக்கெடுப்பு: பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் அக்டோபர் 2024-ல் தொடங்கும் 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோரியுள்ளார். கணக்கெடுப்பு பணிக்கு 234 கணக்கெடுப்பாளர்களும், 48 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (செப்டம்பர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்நடை கணக்கெடுப்பு பணி குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

கால்நடை கணக்கெடுப்பு பணி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசின் சார்பில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பின் மூலம் கால்நடைகள் தொடர்பான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கால்நடைகளின் நலம் பேணுவதற்கான சரியான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த கணக்கெடுப்பில் வீடுகள், கடைகள், தோட்டங்கள், பண்ணைகளில் உள்ள மாடு, எருமை, ஆடு, குதிரை, நாய், பன்றி, கோழி, வாத்து போன்ற அனைத்து வகையான கால்நடைகளும் கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு இதற்காக உருவாக்கப்பட்ட செயலியின் மூலம் கைபேசியில் பதிவு செய்யப்படும்.

தற்போது நாடு தழுவிய 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணி அக்டோபர் 2024 மாத ஆரம்பத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பணிக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 234 கணக்கெடுப்பாளர்களும், அவர்களின் பணியை கூர்ந்தாய்வு செய்ய 48 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இத்திட்டப் பணி தொடர்பான பயிற்சிகள் பல்வேறு நிலைகளில் வழங்கப்பட்டுள்ளன.

அக்டோபர் மாத ஆரம்பத்தில் தொடங்கவிருக்கும் கால்நடை கணக்கெடுப்புப் பணி குறித்த விவரங்களை சேகரிக்க வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை நல்ல முறையில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...