கோவையில் கால்நடை கணக்கெடுப்பு: பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் அக்டோபர் 2024-ல் தொடங்கும் 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோரியுள்ளார். கணக்கெடுப்பு பணிக்கு 234 கணக்கெடுப்பாளர்களும், 48 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (செப்டம்பர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்நடை கணக்கெடுப்பு பணி குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

கால்நடை கணக்கெடுப்பு பணி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசின் சார்பில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பின் மூலம் கால்நடைகள் தொடர்பான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கால்நடைகளின் நலம் பேணுவதற்கான சரியான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த கணக்கெடுப்பில் வீடுகள், கடைகள், தோட்டங்கள், பண்ணைகளில் உள்ள மாடு, எருமை, ஆடு, குதிரை, நாய், பன்றி, கோழி, வாத்து போன்ற அனைத்து வகையான கால்நடைகளும் கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு இதற்காக உருவாக்கப்பட்ட செயலியின் மூலம் கைபேசியில் பதிவு செய்யப்படும்.

தற்போது நாடு தழுவிய 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணி அக்டோபர் 2024 மாத ஆரம்பத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பணிக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 234 கணக்கெடுப்பாளர்களும், அவர்களின் பணியை கூர்ந்தாய்வு செய்ய 48 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இத்திட்டப் பணி தொடர்பான பயிற்சிகள் பல்வேறு நிலைகளில் வழங்கப்பட்டுள்ளன.

அக்டோபர் மாத ஆரம்பத்தில் தொடங்கவிருக்கும் கால்நடை கணக்கெடுப்புப் பணி குறித்த விவரங்களை சேகரிக்க வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை நல்ல முறையில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...