உடுமலை நாராயணகவி கவிராயர் 125வது பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு மரியாதை

உடுமலையில் நாராயணகவி கவிராயரின் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட அதிகாரிகள், எம்.பி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Coimbatore: உடுமலை நாராயணகவி கவிராயரின் 125வது பிறந்தநாள் விழா இன்று (25.09.2023) உடுமலையில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, உடுமலை குட்டை திடலில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பொள்ளாச்சி எம்.பி கே.ஈஸ்வரசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாராயணகவி கவிராயர் 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா பூளவாடி கிராமத்தில் பிறந்தார். பொதுவுடமை, சமத்துவம், பெண் விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போக்கு சிந்தனைகளை கற்றறிந்த அவர், விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடைகள் தோறும் பாடினார்.



இந்நிகழ்வில், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் ஆ.காளீஸ்வரன் வரைந்த நாராயணகவியின் உருவப்படம் பரிசளிக்கப்பட்டது. உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை சார்பில், உடுமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு நாராயணகவியின் பெயரைச் சூட்டுதல், மணிமண்டபத்தில் புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள படிப்பகத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் உடுமலை நாராயணகவி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...