GST பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் குழு: வானதி சீனிவாசன் தகவல்

கோவையில் GST தொடர்பான பிரச்சினைகள் அமைச்சர் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். போலி ஸ்மார்ட் கார்டு விவகாரம், சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவை ராமநாதபுரம் கொண்டசாமி லேஅவுட் மற்றும் அலமேலு மங்கம்மாள் லேஅவுட் பகுதிகளில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் பங்கேற்ற கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், "GST தொடர்பான சிக்கல்களை களைவதற்கு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கோவையில் கிடைத்துள்ள GST தொடர்பான விஷயங்கள் அந்த அமைச்சர்கள் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். மாநிலத்தின் நிதி அமைச்சரிடமும் GST தொடர்பான கருத்துக்களை வழங்க இருக்கிறோம்" என்றார்.



ஸ்மார்ட் கார்டுகள் போலியாக உருவாக்கப்படுவது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக கூறிய வானதி சீனிவாசன், "ஏழைகளுக்கு அரசாங்கத்தின் திட்டங்கள் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. மாநில அரசு இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "என்கவுண்டர் செய்தால் மக்களை சமாதானப்படுத்தி விடலாம் என்று அரசு நினைக்கிறது. பிரச்சனைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வு காண அரசு முயற்சிப்பதில்லை. அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு மாற்றம் இருக்கலாம் ஆனால் ஏமாற்றம் தமிழக மக்களுக்கு தான்" என்றார்.



பெண்கள், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்தும் அவர் பேசினார். "உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுபவர்களை கைது செய்கிறது அரசு" என்று விமர்சித்தார்.

மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "கொடுக்கின்ற பணத்தை செலவு செய்யாமல் பிரதமர் பணம் கொடுக்கவில்லை என்று கோரிக்கை வைப்பது ஏன்?" என்ற கேள்வியை எழுப்பினார்.

கோவை புட்டுவிக்கி பகுதியில் மனித கழிவுகள் நேரடியாக நொய்யல் ஆற்றில் கலப்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மனித கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...