கோவையில் கடந்த சில மாதங்களாக வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பம் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வெளியூர் சென்று விடுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் பூட்டிய கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று வருகின்றனர்.
இதனை தடுக்க கோவை மாநகர காவல்துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்றுவருகின்றனர். இந்த நிலையில், யாரும் இல்லாத சாலையில் வரும் வயதானவர்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல் கோவையை சுற்றி வருகிறது.
சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம் தங்களை காவல்துறையினர் அல்லது சமூக சேவகர் என்று காட்டிகொள்ளும் மர்ம கும்பல், சம்பந்தப்பட்ட பகுதியில் அதிக அளவில் திருட்டு நடைபெறுவதாக கூறி, அணிந்திருக்கும் நகைகளை பைக்குள் வைக்க அறிவுறுத்துகிறது.
இதை நம்பி பொதுமக்கள் தங்கள் ஆபரணங்களை ஒவ்வொன்றாக கழட்டி கொடுக்க அதை ஒரு காகிதத்தில் மடிப்பது போல மடித்து கொடுக்கிறது அந்த மர்ம கும்பல். பின்னர், வீடு திரும்பி மடித்த காகிதத்தை திறந்து பார்க்கையில் அதில் வெறும் கற்கள் தான் கிடைக்கின்றன. இந்த நூதன கொள்ளையில் பெரும்பாலும் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் கிணற்றுக்கடவு பகுதியில் அரங்கேறியுள்ளது. கிணத்துக்கடவு தேர் வீதியை சேர்ந்தவர் சந்திரா (80). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான இவர் வங்கிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் வழிமறித்த இரு மர்ம நபர்கள், இது கொள்ளையர்கள் நடமாடும் பகுதி எனக்கூறியுள்ளனர். தொடர்ந்து, நகைகளை கழட்டி கொடுத்தால் காதிகத்தில் மடித்து கொடுப்பதாக கூறிய அந்த நபர்களை நம்பிய சந்திரா தனது 7 பவுன் நகைகளை கழட்டி கொடுத்தார். அவர்களும் அதனை மடிப்பதுபோல் காகிதத்தை மடித்து சந்திராவிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் மடித்து கொடுத்த காகிதத்தோடு வீடு திரும்பிய சந்திரா அதில் நகைகள் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கிணத்துக்கடவு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் பாதுகாப்பு இருந்த போதிலும் தொடர்ந்து, இது போன்ற கைவரிசையை காட்டிவரும் கும்பலிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டியது அவரவரின் தலையாய பொறுப்பு. எனவே மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சொல்லுறதை சொல்லிட்டோம், உஷார்...!
இதனை தடுக்க கோவை மாநகர காவல்துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்றுவருகின்றனர். இந்த நிலையில், யாரும் இல்லாத சாலையில் வரும் வயதானவர்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல் கோவையை சுற்றி வருகிறது.
சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம் தங்களை காவல்துறையினர் அல்லது சமூக சேவகர் என்று காட்டிகொள்ளும் மர்ம கும்பல், சம்பந்தப்பட்ட பகுதியில் அதிக அளவில் திருட்டு நடைபெறுவதாக கூறி, அணிந்திருக்கும் நகைகளை பைக்குள் வைக்க அறிவுறுத்துகிறது.
இதை நம்பி பொதுமக்கள் தங்கள் ஆபரணங்களை ஒவ்வொன்றாக கழட்டி கொடுக்க அதை ஒரு காகிதத்தில் மடிப்பது போல மடித்து கொடுக்கிறது அந்த மர்ம கும்பல். பின்னர், வீடு திரும்பி மடித்த காகிதத்தை திறந்து பார்க்கையில் அதில் வெறும் கற்கள் தான் கிடைக்கின்றன. இந்த நூதன கொள்ளையில் பெரும்பாலும் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் கிணற்றுக்கடவு பகுதியில் அரங்கேறியுள்ளது. கிணத்துக்கடவு தேர் வீதியை சேர்ந்தவர் சந்திரா (80). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான இவர் வங்கிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் வழிமறித்த இரு மர்ம நபர்கள், இது கொள்ளையர்கள் நடமாடும் பகுதி எனக்கூறியுள்ளனர். தொடர்ந்து, நகைகளை கழட்டி கொடுத்தால் காதிகத்தில் மடித்து கொடுப்பதாக கூறிய அந்த நபர்களை நம்பிய சந்திரா தனது 7 பவுன் நகைகளை கழட்டி கொடுத்தார். அவர்களும் அதனை மடிப்பதுபோல் காகிதத்தை மடித்து சந்திராவிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் மடித்து கொடுத்த காகிதத்தோடு வீடு திரும்பிய சந்திரா அதில் நகைகள் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கிணத்துக்கடவு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் பாதுகாப்பு இருந்த போதிலும் தொடர்ந்து, இது போன்ற கைவரிசையை காட்டிவரும் கும்பலிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டியது அவரவரின் தலையாய பொறுப்பு. எனவே மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சொல்லுறதை சொல்லிட்டோம், உஷார்...!