உடுமலை அருகே சிறுமிகளை ஜிப் ஓட்ட வைத்து வீடியோ எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையத்தில் சிறுமிகளை ஜிப் ஓட்ட வைத்து வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட காளிமுத்து என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியில் சிறுமிகளை ஜிப் ஓட்ட வைத்து வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னிடம் உள்ள ஜீப் குறித்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து, அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்க வைத்து அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிறுமிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதற்கு காளிமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறார்களை ஆபத்தான நிலைக்கு உள்ளாக்கியதோடு, அவர்களின் பாதுகாப்பை புறக்கணித்து செயல்பட்டதற்காக காளிமுத்து மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது போன்ற ஆபத்தான செயல்களை தடுக்க வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் லைக்குகள் மற்றும் பார்வையாளர்களை பெறுவதற்காக சிறார்களை பயன்படுத்தும் போக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...