கோவையில் பகலில் பிச்சைக்காரராக நடித்து, இரவில் திருடிய நபர் கைது

கோவை சூலூரில் பகலில் பிச்சைக்காரராக நடித்து, இரவில் ஹெல்மெட் அணிந்து கடைகளில் திருட முயன்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் கலங்கள் சாலையில் உள்ள ஒரு பிரபல பழமுதிர் நிலையத்தில் நடந்த திருட்டு முயற்சி சம்பவம் குறித்த விசாரணையில், பகலில் பிச்சைக்காரராக நடித்து இரவில் திருடும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கடையை அப்பாஸ் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்ற அப்பாஸ், மறுநாள் காலை கடைக்கு வந்தபோது, கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். ஆனால், கடையில் எதுவும் திருடப்படவில்லை.



இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் கடையை உடைத்து உள்ளே நுழைந்து சென்றது தெரிய வந்தது. மேலும் விசாரணையில், இந்த நபர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் என்றும், அவர் பகல் நேரங்களில் பிச்சைக்காரராக நடித்து கடை முன்பு படுத்துக்கொண்டு கடையை கவனித்து, இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கடைகளுக்குள் புகுந்து திருட முயற்சிப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ராமசாமியை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று (செப்டம்பர் 24) சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...