தமிழகத்தில் குண்டாஸ் சட்டம் மோசமாக பயன்படுத்தப்படுகிறது - கோவையில் சவுக்கு சங்கர் வழக்கறிஞர்

கோவையில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவில் போடப்படும் குண்டாஸில் 51% தமிழகத்தில் மட்டும் போடப்படுவதாகவும், தமிழ்நாடு போலீஸ் ஸ்டேடாக மாறி வருவதாகவும் கூறினார்.



கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த இரண்டாவது குண்டாஸ் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அவரை விடுதலை செய்யச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசே சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த குண்டாஸை திரும்பப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

இந்தியா முழுவதும் போடப்படுகிற குண்டாஸில் 51% தமிழகத்தில் மட்டும் போடப்படுவதாகவும் குண்டாஸ் சட்டம் தமிழகத்தில் மிகவும் மோசமாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். தமிழக அரசு, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுபவர்கள் மீது கவனம் செலுத்தாமல் மக்களின் அன்றாட பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும் நிலையை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது சாதாரண குற்றவாளியை பிடிப்பதற்கு கூட கை கால்களை உடைத்தும் துப்பாக்கி சூடு நடத்தியும் கைது செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு போலீஸ் ஸ்டேடாக மாறி வருவதாகவும் கூறினார். சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டிருக்கும் பிணைகளில், பேட்டியளிக்கக்கூடாது, பேசக்கூடாது என்று எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், யார் அவதூறு பரப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் குறிப்பிட்ட ஒரு சாரார் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறினார். தற்போது துப்பாக்கிச் சூடு என்பது மிகவும் இயல்பான ஒன்றாக மாறி வருவதாகவும் இது மிகவும் ஆபத்தான விஷயம் என்றும் கூறிய அவர், இத்தனை துப்பாக்கிச் சூடுகள் நடத்தி கைது செய்யப்பட்டது போன்று நக்சலைட் பரவலாக இருந்த மாநிலங்களில் கூட இல்லை என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...