தொண்டாமுத்தூரில் புதிய வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்திற்கு 9 செண்ட் நிலம் ஒதுக்கீடு

கோவை தொண்டாமுத்தூரில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் அமைக்க 9 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேளாண் உதவி இயக்குனரிடம் உத்தரவு நகலை வழங்கினார்.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் அமைக்க 9 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்கான உத்தரவு நகலை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, வேளாண் உதவி இயக்குனர் சக்திவேலிடம் வழங்கினார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கவுன்சிலர்கள் மாமன்றக் கூட்டத்தில் இந்த 9 செண்ட் நிலம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உத்தரவு நகல் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலாராணி, தொண்டாமுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தப் புதிய கட்டிடம் அமைவதன் மூலம், அப்பகுதி விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான சேவைகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...