மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் விடுதலையை கொண்டாடிய திமுகவினர்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


கோவை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



காரமடை கிழக்கு ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காரமடை அருகே தென் திருப்பதி நால்ரோடு பகுதியில், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ். எம். டி. கல்யாணசுந்தரம் தலைமையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளேபாளையம் ஊராட்சி நால்ரோடு பகுதியில், ஊராட்சி தலைவர் பிரஸ் சிவகுமார் தலைமையிலும், துணைத் தலைவர் சுரேந்திரன் முன்னிலையிலும் கொண்டாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரமும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



மேட்டுப்பாளையம் நகரில், நகர திமுக சார்பில் நகர செயலாளர்கள் முனுசாமி, முகமது யூனூஸ் ஆகியோர் தலைமையிலும், முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார் முன்னிலையிலும் கொண்டாட்டம் நடைபெற்றது.



அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், பேருந்து நிலையம் அருகே பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் திமுகவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...