கோவையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியத்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் மே 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் வருகின்றார். 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் சென்னை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். 11-ம் தேதி மாலை கோவை வருகின்றார். பின்னர் 12-ம் தேதி கோவையில் பல்வேறு முக்கிய நபர்களையும், அமைப்புகளையும் சந்தித்து அமித்ஷா பேசவுள்ளார்.
அமித்ஷா, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 90 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு பகுதியே தமிழகம் ஆகும். தமிழக மக்கள் ஆட்சியில் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் பாஜக ஆகும்.
மின்சாரத்திற்காக 3 ரூபாய் 33 காசுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்குகிறேன் என அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மின் வெட்டு தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் மின்வெட்டே இங்கு இல்லை என வாதாடி வருகிறார். கொடநாடு எஸ்டேட்டில் தொடரும் கொலை சம்பவம் மக்கள் மத்தியில் கொடநாடா அல்லது கொலைநாடா என்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவும், திமுக-வும் ஆட்சிசெய்யும் தகுதியை இழந்துவிட்டன. இனி வரும் தேர்தல்களில் பாஜக தமிழகத்தில் ஆட்சியமைக்கும்" என பேசினார்.
அமித்ஷா, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 90 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு பகுதியே தமிழகம் ஆகும். தமிழக மக்கள் ஆட்சியில் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் பாஜக ஆகும்.
மின்சாரத்திற்காக 3 ரூபாய் 33 காசுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்குகிறேன் என அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மின் வெட்டு தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் மின்வெட்டே இங்கு இல்லை என வாதாடி வருகிறார். கொடநாடு எஸ்டேட்டில் தொடரும் கொலை சம்பவம் மக்கள் மத்தியில் கொடநாடா அல்லது கொலைநாடா என்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவும், திமுக-வும் ஆட்சிசெய்யும் தகுதியை இழந்துவிட்டன. இனி வரும் தேர்தல்களில் பாஜக தமிழகத்தில் ஆட்சியமைக்கும்" என பேசினார்.