கொடநாடா கொலை நாடா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என கோவையில் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

கோவையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியத்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் மே 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் வருகின்றார். 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் சென்னை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். 11-ம் தேதி மாலை கோவை வருகின்றார். பின்னர் 12-ம் தேதி கோவையில் பல்வேறு முக்கிய நபர்களையும், அமைப்புகளையும் சந்தித்து அமித்ஷா பேசவுள்ளார்.

அமித்ஷா, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 90 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு பகுதியே தமிழகம் ஆகும். தமிழக மக்கள் ஆட்சியில் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் பாஜக ஆகும். 

மின்சாரத்திற்காக 3 ரூபாய் 33 காசுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்குகிறேன் என அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மின் வெட்டு தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் மின்வெட்டே இங்கு இல்லை என வாதாடி வருகிறார். கொடநாடு எஸ்டேட்டில் தொடரும் கொலை சம்பவம் மக்கள் மத்தியில் கொடநாடா அல்லது கொலைநாடா என்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவும், திமுக-வும் ஆட்சிசெய்யும் தகுதியை இழந்துவிட்டன. இனி வரும் தேர்தல்களில் பாஜக தமிழகத்தில் ஆட்சியமைக்கும்" என பேசினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...