அன்னூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி தப்பி ஓடும்போது விபத்து: காலில் எலும்பு முறிவு

அன்னூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட சரித்திர குற்றவாளி தப்பி ஓடும்போது வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி தப்பி ஓடும்போது விபத்துக்குள்ளாகி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பூபதி என்பவர் எல்லப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நபர் ஒருவர் பூபதியின் செல்போனை பறித்ததோடு, அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துள்ளார்.



பின்னர் அந்த நபர் தப்பியோட முயன்றபோது வழுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில், குற்றவாளி ஜெர்மன் ராகேஷ் என அடையாளம் காணப்பட்டார். இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேட்டில் குற்றவாளியாக உள்ளவர் என்பதும் தெரிய வந்தது.

தற்போது ஜெர்மன் ராகேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...