கோவை இடையர்பாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி கொள்ளை

கோவையில் தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது இந்த கொள்ளை நடந்துள்ளது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகை மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கோவை சாய்பாபா காலனி அருகிலுள்ள இடையர்பாளையம், பாரிநகரைச் சேர்ந்த நாகராஜன் (70 வயது) என்பவர் தொழிலதிபராக உள்ளார். கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி, நாகராஜன் தனது குடும்பத்துடன் தொழில் நிமித்தமாக பெங்களூரு சென்றிருந்தார். அவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.

நேற்று (செப்டம்பர் 25) நாகராஜன் தனது வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த 70 பவுன் நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவை திருடப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.

இதனையடுத்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, குமார், சுரேஷ் உள்ளிட்ட சிலர் இந்த கொள்ளையை நடத்தியது தெரிய வந்தது.

இது குறித்து நாகராஜன், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், துணை ஆய்வாளர் தீபா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...