கோவை அப்பநாயக்கன்பாளையத்தில் தூய்மைப் பணி மற்றும் சாலை சீரமைப்பு

கோவை மாநகராட்சியின் 1-வது வார்டில் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் புதிய கழிப்பிடம் கட்டுவதற்கான தூய்மைப் பணி மற்றும் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி செப்டம்பர் 26 அன்று மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சியின் 1-வது வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று (செப்டம்பர் 26) முக்கிய தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



அப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் புதிய கழிப்பிடம் கட்டுவதற்காக அந்தப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்த முயற்சி பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும்.



மேலும், அப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் முதல் ஜல்லிக்காடு முகப்பு வரையிலான பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.



3-வது அத்திக்கடவு திட்டத்தின் குழாய் பதிப்பு பணிகளால் சேதமடைந்த சாலையை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றினர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...