திருப்பூர்-திருச்செந்தூர் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 52 பயணிகள் உயிர் தப்பினர்

தாராபுரம் அருகே திருப்பூர்-திருச்செந்தூர் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுனரின் சாமர்த்தியமான செயல்பாட்டால் 52 பயணிகள் உயிர் தப்பினர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று நள்ளிரவு ஒரு அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, தாராபுரம் பேருந்து நிலையம் அருகே அலங்கியம் பைபாஸ் சாலையில் வந்தபோது திடீரென முன்பக்க ஸ்டேரிங் அருகே தீப்பிடித்தது.

பேருந்தின் ஓட்டுனர் கணேசமூர்த்தி (வயது 55) சாமர்த்தியமாக செயல்பட்டு, பேருந்தை பைபாஸ் சாலையில் ஓரமாக நிறுத்தினார். அவர் உடனடியாக அனைத்து பயணிகளிடமும் தீப்பிடித்த விவரத்தைத் தெரிவித்தார். இதனால் பேருந்தில் பயணம் செய்த 52 பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.



பயணிகள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே தீ வேகமாகப் பரவி, பேருந்து முழுவதும் எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

பயணிகள் திருச்செந்தூர் செல்வதற்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டபோது, இடப்பற்றாக்குறை காரணமாக பயணிகளுக்கும் பேருந்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் மாயவன், மூலனூர் காவல் ஆய்வாளர் விஜயா மற்றும் தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை சமாதானப்படுத்தி மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த பேருந்து தீ விபத்து சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...