மேட்டுப்பாளையம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம்: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்காததை எதிர்த்து பணி புறக்கணிப்பு மற்றும் கருப்பு கொடி போராட்டம் நடத்துகின்றனர்.



Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி ஒப்பந்ததாரரை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் பணிகளைப் புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணியில் 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்காததோடு, பிஎஃப், இஎஸ்ஐ போன்ற சலுகைகளுக்கான பிடித்தங்களை முறையாக செலுத்தாமல் ஒப்பந்ததாரர் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இது தொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு தொழிற்சங்கம் சார்பில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துப்புரவு பணிகளை புறக்கணித்து, தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வி.சி.க மாவட்ட செயலாளர் தொல்குடி மைந்தன் தலைமையில், சங்கர் நகர் பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் ஊர்வலம் நடத்தி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். முறையாக ஊதியம் வழங்குவதோடு, பிடித்தம் செய்யப்பட்ட பி.எப், இ.எஸ்.ஐ தொகைகளை உரிய முறையில் செலுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...